Wednesday, February 9, 2011

பஞ்ச சயன ரங்கம் // பகுதி-07 // நிறைவுப் பகுதி // 22.01.2011




பஞ்சரங்கம் தரிசித்த உங்களது வாழ்வு வளமாகட்டும்..!



பஞ்சம் என்ற சொல்லே உங்களது வாழ்வதனில் வராமல் செழுமை மலரட்டும்.

உங்களது இறையுணர்வு எப்போதும் துணை நிற்கட்டும்.



இந்த கட்டுரை வெளிவந்த பின் பஞ்சரங்க சயன தரிசனம் மேற்கொண்ட

சில வலைத்தள அன்பர்கள் தாங்கள் பெற்ற பயனை என்னோடு பகிர்ந்து கொண்டபோது அரங்கனின் அருள்கண்டு பூரித்துப்போனேன்.



பஞ்சரங்க சயன தரிசனம் செய்தபின் உறையூரில் உறையும் கல்யாண ரங்கனையும், கமலவல்லியையும் முடிந்தால் தரிசியுங்கள்.



உங்கள் கவலையனைத்தையும் மறந்துவிடுங்கள். அரங்கன் அனைத்தையும் பார்த்துக் கொள்வான்..!



ஆழ்ந்த பக்தியுடனும், எளிமையுடனும், இறையுணர்வோடும் இருப்பவர்களை எந்த வல்வினையும் அண்டாது...! இவர்களது அண்மை இவர்களைச் சுற்றியிருப்பவர்களுக்கு ஒரு பெருமை..! பெரும் பேறு..!



நன்றி..!



பேருவைகையுடன்,

-முரளீ பட்டர்-