Wednesday, February 9, 2011

பஞ்ச சயன ரங்கம் // பகுதி-07 // நிறைவுப் பகுதி // 22.01.2011




பஞ்சரங்கம் தரிசித்த உங்களது வாழ்வு வளமாகட்டும்..!



பஞ்சம் என்ற சொல்லே உங்களது வாழ்வதனில் வராமல் செழுமை மலரட்டும்.

உங்களது இறையுணர்வு எப்போதும் துணை நிற்கட்டும்.



இந்த கட்டுரை வெளிவந்த பின் பஞ்சரங்க சயன தரிசனம் மேற்கொண்ட

சில வலைத்தள அன்பர்கள் தாங்கள் பெற்ற பயனை என்னோடு பகிர்ந்து கொண்டபோது அரங்கனின் அருள்கண்டு பூரித்துப்போனேன்.



பஞ்சரங்க சயன தரிசனம் செய்தபின் உறையூரில் உறையும் கல்யாண ரங்கனையும், கமலவல்லியையும் முடிந்தால் தரிசியுங்கள்.



உங்கள் கவலையனைத்தையும் மறந்துவிடுங்கள். அரங்கன் அனைத்தையும் பார்த்துக் கொள்வான்..!



ஆழ்ந்த பக்தியுடனும், எளிமையுடனும், இறையுணர்வோடும் இருப்பவர்களை எந்த வல்வினையும் அண்டாது...! இவர்களது அண்மை இவர்களைச் சுற்றியிருப்பவர்களுக்கு ஒரு பெருமை..! பெரும் பேறு..!



நன்றி..!



பேருவைகையுடன்,

-முரளீ பட்டர்-

Saturday, January 22, 2011

பஞ்ச சயன ரங்கம் // பகுதி-07 // 22.01.2011 // நிறைவுப் பகுதி




பஞ்சரங்கம் தரிசித்த உங்களது வாழ்வு வளமாகட்டும்..!



பஞ்சம் என்ற சொல்லே உங்களது வாழ்வதனில் வராமல் செழுமை மலரட்டும்.
உங்களது இறையுணர்வு எப்போதும் துணை நிற்கட்டும்.



இந்த கட்டுரை வெளிவந்த பின் பஞ்சரங்க சயன தரிசனம் மேற்கொண்ட
சில வலைத்தள அன்பர்கள் தாங்கள் பெற்ற பயனை என்னோடு பகிர்ந்து கொண்டபோது அரங்கனின் அருள்கண்டு பூரித்துப்போனேன்.



பஞ்சரங்க சயன தரிசனம் செய்தபின் உறையூரில் உறையும் கல்யாண ரங்கனையும், கமலவல்லியையும் முடிந்தால் தரிசியுங்கள்.



உங்கள் கவலையனைத்தையும் மறந்துவிடுங்கள். அரங்கன் அனைத்தையும் பார்த்துக் கொள்வான்..!



ஆழ்ந்த பக்தியுடனும், எளிமையுடனும், இறையுணர்வோடும் இருப்பவர்களை எந்த வல்வினையும் அண்டாது...! இவர்களது அண்மை இவர்களைச் சுற்றியிருப்பவர்களுக்கு ஒரு பெருமை..! பெரும் பேறு..!



நன்றி..!



பேருவைகையுடன்,

-முரளீ பட்டர்-

Saturday, December 4, 2010

பஞ்ச சயன ரங்கம் - பகுதி-06 // 04.12.2010

05. திருப்பேர்நகர் என்னும் கோவிலடி


கோபுரப்பட்டி அருகிலுள்ள அழகிய மணவாளம், திருவெள்ளரை மற்றும் திரு அன்பில் ஆகிய க்ஷேத்திரங்களைத் தரிசித்து விட்டீர்களா? வாருங்கள் நாம் பஞ்ச சயன ரங்கத்தின் முற்றுப்புள்ளியான ஸ்ரீஅப்பாலரங்கன் உறையும் கோவிலடிக்கு பயணிப்போம்.



திரு அன்பிலிலிருந்து ஒரு புதியபாலம் ஒன்று காவிரியின் குறுக்கே சமீபத்தில்

கட்டப்பட்டுள்ளது. அன்பில் பெருமாளின் அரவணைப்பைப் பெற்றபின் இந்த பாலம் வழியே சீக்கரமாகவே இந்த சன்னிதியினை அடையலாம்.



'இன்று என்னைப் பொருளாக்கி தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்து என் செய்வான்?
குன்றெனத் திகழ் மாடங்கள் சூழ் திருப்பேரான்
ஒன்று எனக்கு அருள் செய்ய உணர்தலுற்றேனே!'

- நம்மாழ்வார் திருவாய்மொழி



திருப்பேர் நகரான் திருமாலிரும்சோலை
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து
"இருப்பேன்" அன்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்று அமுதுண்டு களித்தேனே!"




- நம்மாழ்வார் திருவாய்மொழி



பெருமாள், “இந்த இடத்தை விட்டு பெயரேன்“ எனவருளியதால், 'திருப்பேர்நகர்' என்று பெயர்க்காரணம் . நம்மாழ்வார் இந்த பெருமாளை தரிசித்தபின் “...அமுதுண்டு களித்தேனே...“ என்கின்றார். ஆம் இந்த அமுதம் நம் பிணி போக்கும் அமுதம்.

நம் பசி, நம்மை சுற்றியுள்ளோரின் பசியாற்றும் அமுதம். நம் பாபம் போக்கும் அமுதம். நமக்கு அழிவில்லா மொக்ஷானந்ததை காட்டிக்கொடுக்கும் அமுதம்!




சோழ தேசத்தின் வழியாக கோயில் என்னும் திருவரங்கத்திற்குள் பக்தர்கள் எடுத்துவைக்கும் முதல் அடியில் இருப்பதால் இந்த திவ்யதேசம் கோயிலடி என்று பெயர்பெற்றது!




நம் மன இருளின் நடுவே ஜீவாத்மாவிற்கு சுஷும்னா நாடியை காட்டிக்கொடுக்கும் பேரொளியாய்!, பேறேன்! என்று உள்ளத்தினுள் இருக்கும் அந்தர்யாமியாக, நம் நெஞ்சுக்குள் நிறைபவரே இந்த திருபேர்நகர் எம்பெருமான்!. நாம் ஸ்ரீவைகுண்டம் புகுவதற்கு ஆணிவேராய் உதவும் பெருமாள் இவர்!




எப்படி ஜீவாத்மா ஸ்ரீவைகுண்டம் அடைவதற்கு முதலடியாய் அந்தர்யாமி துனைபுரிகிராரோ! அப்படியே நாம் பூலோக வைகுண்டமான திருவரங்கம் புக துனைபுரிகிறார் இந்த பெருமாள்!



இந்த பெருமாள், பெரியாழ்வார், திருமழிசையாழ்வார்ஈ திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் (33 பாசுரங்கள) ஆகியோரால் கொண்டாடப்பட்டவர்.



மேற்கு நோக்கி சயனம். தாயார் கமலவல்லித் தாயார். விமானம் - இந்திரவிமானம்.

தீர்த்தம் காவிரி.



இங்கு இத்தலத்துப் பெருமாள் காவிரியின் கரையில், ஒரு கையினை அப்பக்குடத்தின் மேல் வைத்தப்படி, காவிரியன்னையின் தாலாட்டு அரவணைப்பில் குளர்ச்சியாய் பள்ளி கொண்டருளுகின்றார்.



எப்போதும் நதிதீரத்தில் குளிர பள்ளி கொள்ளும் இப்பெருமாளை வணங்குவோர் வாழ்வுதனையும் இத்தலத்து பெருமாள் குளிரக் கடாக்ஷிக்கின்றார். காவிரி கரையின் ஓரமாக ஒரு முறை பயணித்து இந்த பெருமாளையும் தரிசியுங்கள.



வாழ்வில் உய்வு பெறுதல் திண்ணம்..!







- தொடரும்...





Dear Swami,
Adiyen Ramanuja Dasan,
This is the place Where Nammalwar did the last Saranagathi in Thiruvaimozhi.
With 2nd and 3rd verse, he proclaims that he surrendered unto ThiruperNagar emperuman and in the 10th verse,he proclaims that he got the upeyam, that is thirupernagar emperuman's thiruvadi and also tells us there will be no problems any more if you surrender unto the devotee of thirupernagar emperuman.

-rajagopal.kannan@gmail.com








- தொடரும்...

Thursday, November 11, 2010

பஞ்ச சயன ரங்கம் / பகுதி-05 // 11.11.2010

04. திருஅன்பில்


கோபுரப்பட்டியினை தரிசித்தபின், சுமார் 1 கி.மீ தொலைவில் ’அழகிய மணவாளம்' என்னும் திருத்தலம் உள்ளது. நம்பெருமாள் ஸ்ரீரங்கத்திலிருந்து தப்பித்துச் செல்கையில், இங்கு சிலகாலம் தங்கி சென்றதாக வரலாறு. நல்ல ஆகுரிதியான ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீசுந்தரராஜ பெருமாளை தரிசனம் செய்வீர் பின்னர் அருகில் சுமார் 2 கி.மீ தொலைவில்தான் “திருவெள்ளரை“ எனும் மிகவும் புராதனமான திவ்யதேசம் உள்ளது. இந்த திவ்யதேச பெருமாளையும் சேவித்து அங்கிருந்து திரும்பவும் மண்ணச்சநல்லுார் வழியாக டோல்கேட் அடைந்து இலால்குடி செல்லும் பாதையில் பயணித்து “திருஅன்பில்“ என்னும் நான்காவது சயனம் கொண்ட அரங்கனைத் தரிசிப்போம் வாரீர்.



அறியாமல் செய்த பாபத்தினி்ன்று கூட தப்பி விடலாம். ஆனால் ஒருவர் சாபத்திலிருந்து விடுதலை பெறுதல் மிகவும் கடினம். ரிஷிகளின் காலத்தில் சாபங்களுக்கும், சாபவிமோசனங்களுக்கும் குறைவேயில்லை. ஒரு மகரிஷி தாம் பெற்ற சாபத்தினால் தவளையாகவே மாறிவிட்டார். தவியாய் தவித்தார். இத்தலத்து பெருமாள்தான் அவருக்கு சாபத்தினின்று விடுதலை அளித்தவர். “மண்டூகம்“ என்றால் சமஸ்கிருதத்தில் 'தவளை' என்று அர்த்தம். அந்த மகரிஷி இந்த சாபவிமோசனத்திற்குப் பிறகு 'மண்டூக மகரிஷி' என்றே அழைக்கப்பெற்றார். இந்த மகரிஷி தன் சாபவிமோசனம் பெற நித்யமும் நீராடிய குளம் ''மண்டூக புஷ்கரிணி' என்று அழைக்கப்படுகின்றது. மகாசாபத்தினைப் போக்கிய இந்த புஷ்கரிணியும் பெருமாளும் நம் பாபத்தினைத் தொலையச் செய்ய மாட்டார்களா என்ன..? நம் முற்பிறவி பாபத்தினையும் சேர்த்துக் கண்டிப்பாக போக்குவார். இத்தலத்தில் இன்னொரு விசேஷமும் உண்டு. மூன்று நதிகள் இணையும் இடம் திரிவேணி சங்கமம் ஆகும். இந்த சங்கமம் நம் சங்கடங்களை போக்கும். சாபங்கள், பாபங்கள் எல்லாம் தொலைந்து போகும். இந்த புண்ணிய க்ஷேத்திரத்தில் காவிரி, பல்குணி, சாவித்ரி ஆகிய புண்ணிய நதிகள் சங்கமம் ஆகுவதாக புராணங்கள் சொல்கின்றன. பல்குணியும், சாவித்ரியும் கீழே பாதாளத்தில் ஓடுவதாக கூறுகின்றது.. இந்த க்ஷேத்திரத்தினை “தக்ஷிண கயா“ என்றழைப்பர். கயா சென்ற பலனை இத்தலத்தில் நீராடி தரிசித்தால் அடைவோம்.



வால்மீகி ரிஷி இங்குதான் அவதரித்து பின்னர் வடநாடு சென்றார் என்பர். கம்பரும், ஓளவையாரும் இத்தலத்துப் பெருமாளை வழிப்பட்டிருக்கின்றார்கள்.



திருமழிசை ஆழ்வாரால் பாடல் பெற்ற தலமிது.



பெருமாள் : வடிவழகிய நம்பி (சௌந்தரராஜன்)

தாயார் : அழகிய வல்லித் தாயார்

விமானம் : தாரக விமானம்

சயனம் : புஜங்க சயனம்.



(இங்கு ஒரு விஷயம்.! செய்வதெல்லாம் தெரிந்தே செய்துவிட்டு, இம்மாதிரியான தலங்களுக்கு வந்து நீராடினால் போதும் என்று நினைப்பவர்களுக்கு விமோசனமேயில்லை..! ஏதேனும் தவறாக செய்திருப்பின் முதலில் நாம் அந்த தவற்றினைச் செய்தமைக்காக மிகவே வருந்த வேண்டும். கடவுள் நம்மை மன்னிக்க உருக வேண்டும். நீராடியபின் மறந்தும் கூட மீண்டும் தவறு/தீது செய்தல் கூடாது. உளமாற பிரார்த்தித்து, ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்டு பரிகாரங்கள் செய்தால்தான் பலன் நிச்சயம்.)



- தொடரும்...

Saturday, October 30, 2010

பஞ்ச சயன ரங்கம் - பகுதி-04 30.10.2010

03. கோபுரப்பட்டி





வாஸூதேவ பரா வேதா வாஸூதேவ பரா மகா:

வாஸூதேவ பரா யோகா வாஸூதேவ பரா: க்ரியா:

வாஸூதேவ பரம் ஞானம் வாஸூதேவ பரம் தப:

வாஸூதேவ பரோ தர்மோ வாஸூதேவ பரா கதி:



வேத நுால்களின் படி, அறிவின் இறுதி நோக்கமாகயிருப்பவர் வாஸூதேவனே.!

யாகங்கள் செய்யும் நோக்கமே அவரை திருப்திப்படுத்துவதுதான்!.

வேதம் கற்பதே அவரை உணர்வதற்குதான்!.

அவரே பரமஞானம்!

கடும்தவமும் அவரை அறிவதற்கே!

மதமும் அவருக்கு அன்புத் தொண்டாற்றவே..!

எல்லா க்ரியைகளும் பகவான் கிருஷ்ணருக்கே அர்ப்பணம்..!

வாழ்வின் மிக உயர்ந்த இலக்கும் அவரே..!



வாழ்வோ..! சாவோ..! எது நடந்தாலும் ஸ்ரீரங்கத்தில்தான் இருப்பேன் என்ற கொள்கையுடன் வைராக்கியமாக ஒரு காலத்தில் ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்த வைணவர்கள் இருந்திருக்கின்றனர்..! இவர்கள் இறுதி நோக்கமாயுள்ள அரங்கனோடு ஒன்றியவர்கள்..! அரங்கனையும், அவர்களையும் பிரித்தல் என்பது இயலாது..! இன்றும் கூட பலர் இவ்வாறு உள்ளனர்..! இவ்வாறு வைராக்கியமாக வைணவர்கள் வாழ்ந்து வந்த போது ஒரு கொடும் பாதகம் நிகழ்ந்தது..!



1324ம் ஆண்டு. திருவரங்கத்தின் ஒரு மோசமான ஆண்டு..! மாலிக்காபூர் என்னும் முகலாய தளபதியின் தலைமையில் ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்த 12000 வைணவர்களின் தலையைச் சீவிக் கொன்ற ஆண்டு..! “பன்னீராயிரம் தலைத் திருத்திய பன்றியாழ்வான் மேட்டுக்கலகம்” என்று ஸ்ரீரங்கத்தின் கோவிலொழுகு இந்த வரலாற்றினைக் குறிப்பிடுகின்றது.

இந்த கொலைப்படையிடமிருந்து தப்பிய வைணவர்கள் சுமார் 750 பேர்களேயாவர். இவர்கள் அனைவரும் தஞ்சமடைந்த ஊர் கோபுரப்பட்டி.



அபயமளித்து அருளியவர் ஆதிநாயகன் - இந்த ஊரில் பள்ளிகொண்டு அருளும் கதாநாயகன்.



வைணவம் காத்த ஊர் - வைணவம் வளர்த்த ஊர்.



ஸ்ரீரங்கத்தில் இறந்த வைணவர்களுக்கெல்லாம் இங்குள்ள பெருவளவாய்க்காலின் கரையில் இங்குள்ள வைணவர்கள் வாழ்ந்த வரையிலும் அவர்களுக்கான ஈமச்சடங்குகள் அனைத்தும் செய்து வருடந்தோறும் திதி கொடுத்திருக்கின்றனர். இறந்த அனைவருமே இவர்களின் உறவுக்காரர்களா என்ன? ஆம்..! ஆண்டாளின் கூற்றுப்படி அரங்கனுக்கு உற்றவர்கள் அனைவருமே உறவினர்கள்தானே..! ஒரு கூட்டமாக நின்று பலவருடங்கள் ஒரு நதியின் கரையிலோ அல்லது குளத்தின் கரையிலோ, பாரபட்சம் இல்லாது, வேற்றுமைகள் இல்லாது ஒருமித்து சுமார் 50 பேர்கள் சேர்ந்து திதிகள் கொடுத்தாலே அந்த நதி பவிஷ்யமானது..! அந்த நீர் புண்ணிய தீர்த்தம்..! முன்னோர்களின் ஆசிபெற்ற க்ஷேத்திரம்! ஒரு சில தீர்த்தகரைகளுக்கே இந்த புண்ணியபாக்கியமுண்டு. கோபுரப்பட்டி அத்தகைய புண்ணியத்தினைப் பெற்றுள்ளது. இங்கு உறையும் ஆதிநாயகர் பித்ருதோஷங்களை கண்டிப்பாக போக்கக்கூடியவர். ஆதிநாயகி ஸமேத ஆதிநாயகரை வணங்குங்கள். நம் முன்னோர்களின் அருளாசியோடு, வாஸூதேவனாம் ஆதிநாயகனின் அருட்பார்வையும் அமையப்பெறுவீர.



பெருமாள் ஆதிநாயகரை் என்னும் ஸ்ரீரங்கநாதர்

தாயார் ஆதிநாயகி என்னும் ஸ்ரீரங்கநாச்சியார்

சயனம் பால சயனம்

தலவிருட்சம் பன்னீர் புஷ்ப மரம்.



கோவில் திறந்திருக்கும் நேரம்

காலை 0800 மணி முதல் 1200 மணி வரை

மாலை 0500 மணி முதல் 0730 மணி வரை

.

அர்ச்சகரின் அலைபேசி எண் +91 96002 66426.



வழி மண்ணச்சநல்லுார் - அழகிய மணவாளம் - கோபுரப்பட்டி.









- தொடரும்...



இதன் முற்பகுதியினைக் காண இங்கே <கிளிக்> செய்யவும்.

Thursday, October 28, 2010

பஞ்ச சயன ரங்கம் - பகுதி-03 // 7.10.2010


02. உத்தமர் கோவில்



பேரானைக் குறுங்குடி எம்பெருமானை
திருத்தண்கால் ஊரானைக் கரம்பனூர் உத்தமனை
முத்திலங்கு காரார் திண் கடலேழும் மலையேழ் இவ்வுலகேழ் உண்டு
ஆராதென்றிருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே





ஸ்ரீரங்கம் ரெங்கநாதனை மனதின் உள்வாங்கி தரிசனம் செய்த பின் புருஷோத்தமன் உறங்கும் உத்தமர் கோவிலுக்குப் பயணத்தைத் தொடங்குவீர்.



திருமங்கையாழ்வார் பாசுரம் பெற்றத் தலம். ஆழ்வார் “உத்தமன்“ என்றழைக்கவே, அதனையே தம் தலத்திற்கு பெயராகக் கொண்ட - ஆழ்வார் மீது - ஒரு பாடலேயாயினும், அந்த தமிழ் மறை மீது காதல் கொண்ட பெருமாள் இவர்.

ஈசனே பிச்சாடணராய் வந்து இங்கு உறையும் மஹாலக்ஷ்மியின் பூரணமான கடாக்ஷத்தினால் தன் தோஷம் நீங்கப் பெற்றார். இங்கு தாயாரின் பெயர் பூரணவல்லி.

தெய்வங்களே தம் தோஷம் நீங்கப் பெற்ற இந்த க்ஷேத்திரம்தனில் நம் பாவங்கள் தொலையாதா என்ன..? கண்டிப்பாக இந்த திவ்ய உத்தமதம்பதிகள் போக்குவர். கொடிய பாபமும் நொடியில் இவர்கள் அருளிருந்தால் நீங்கும் என்பது திண்ணம்.



இங்கு பெருமாள் புஜங்க சயனம் - கிழக்கு நோக்கி திருமுக மண்டலம்.



விமானம் உத்யோக விமானம்.



தீர்த்தம் கதம்ப தீர்த்தம்



ப்ரத்யக்ஷம் கதம்ப மஹரிஷி மற்றும் உபரிசரவஸூ



மங்களாசாஸனம் திருமங்கையாழ்வார் - ஒரு பாடல்



ஸ்ரீரங்கத்திலிருந்து சுமார் 2 கி.மீட்டருக்குள் அமைந்துள்ளது இந்த தலம்.



பாபம் நீக்கி, நம்மை உத்தம பக்தனாக்கும் இந்த கோவிலினை நன்கு தரிசனம் செய்வீர். நலம் பெறுவீர்.



கோவில் திறந்திருக்கும் நேரம்

காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை

மாலை 4.00 மணி முதல் 09.00 மணி வரை.













- தொடரும்...

Thursday, October 21, 2010

பஞ்ச சயன ரங்கம் பகுதி-02 // 7.10.2010

01.ஸ்ரீரங்கம்.



வைணவத்தினைக் கருவில் சுமந்தவள் அரங்கத்தம்மா..!

வைணவத்தினை வளர்த்த ஆழ்வார்களாகட்டும், ஆச்சார்யர்களாகட்டும் அவர்களுக்கு ஸ்ரீரங்கம்தான் தாய்வீடு..!

எங்கு பிறந்து எங்கு வளர்ந்தாலும் அடைக்கலம் புகுந்தது இந்த அரங்கத்தம்மாவிடம்தான்..!



வைணவத்தின் ஆனிவேர் ஸ்ரீரங்கம்..! எந்த திவ்யதேசம் சென்றாலும் “அடியார்கள் வாழ்க..! அரங்கநகர் வாழ்க..!“ என்னும் கோழம் இல்லாமல் சாற்றுமுறையில்லை. ஸ்ரீரங்கம் நன்கு செழிப்புடன் இருந்தால்தான் வைணவத்திற்கு சிறப்பு..! இங்கு ஏதேனும் தாழ்வு ஏற்பட்டால் உலகிலுள்ள அனைத்து வைணவதலத்திற்கும் தாழ்வே..! அதனால்தான் எங்கெங்கோ பிறந்திருந்தாலும் அடியார்களும், ஆச்சார்யர்களும், ஆழ்வார்களும் ஸ்ரீரங்கத்தில் மண்டியிட்டு கிடந்துள்ளனர்.., கிடக்கின்றனர்..!

இந்த அரங்கத்தம்மா “பெற்ற தாயினும்“ மேலாக அருள்புரிபவள்.

ஸ்வாமி ஸ்ரீதேசிகர் “அள்ள அள்ளக் குறையாத அருள் அமுதம். தோளாத தனிவீரன் ஸ்ரீராமன் தொழுதகோயில். வீடணருக்குத் துணையாய் திருவரங்கம் வரை வந்த கோயில்..! செழுமறையின் முதல் எழுத்தாம் “பிரணவரூபமாய்“ விளங்கும் கோவில்..! தீராத வினை அனைத்தும் தீர்க்கும் கோவில்..!“ என்கிறார்.



இங்கே பெருமாள் “புஜங்க சயனம்” - விமானம் ப்ரணவாக்ருதி விமானம். தாயார் - ஸ்ரீரெங்கநாயகி. எந்த க்ஷேத்திரம் சென்றாலும் “லக்ஷ்மீம் க்ஷீரசமுத்ர ராஜ தனயாம் - ஸ்ரீரங்க தாமேஸ்வரீம்....“ என்றுதான் சாற்றுமுறையில் ஓதுவர். இவள் சமஸ்த லோகங்களுக்கும் “ஓளி்“யாவாள். இவள் கருணையில்லாவிடின் இருட்டுதான் எங்கும்..!

இங்குள்ள தீர்த்தம் சந்திரபுஷ்கரிணி தீர்த்தம். தர்மவர்மா என்னும் சோழ அரசன் அரங்கன் வருகைவேண்டி கடும் தவம் பரிந்த இடம். இந்த அரங்கன் தர்மவர்மா, காவேரீ, விபீஷணன் ஆகியோருக்குப் ப்ரத்யக்ஷம். ஆழ்வார்களோடும், ஆச்சார்யர்கள் பலருடனும் தன்னுடைய “அர்ச்சை“ என்ற நிலைப்பாட்டினையும் தாண்டி அன்போடு அளாவியவன்.

இன்னமும் மெய்யன்போடு இருப்பவரிடத்து தாயன்போடு உருகுபவன். தன்னை அண்டியவர்களை அபய முத்திரை காண்பித்துக் காப்பாற்றும் இந்த அரங்கனை முதலில் தரிசித்து விடுங்கள்.



ஸ்ரீரங்கத்திற்கு முதல் நாள் இரவே அல்லது அதிகாலையிலேயே வந்து தரிசியுங்கள். கோவில் காலை 6.15 மணிக்கு நடைத்திறப்பார்கள். தருமதரிசனத்தில் நின்றாலும் கூட எப்படியும் 7.30 மணிக்குள் தரிசித்து விடலாம். கூடுமானவரை வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளை முடிந்தவரை தவிருங்கள். பகவானைத் தரிசிக்க எல்லா நாட்களும் நல்ல நாட்களே..!

எல்லா நேரமும் நல்ல நேரமே..! இங்கு பெருமாள், தாயாருக்கு நந்தவனத்திலிருந்து வரும் மாலைகளைத் தவிர வேறு ஏதும் சாற்றுவது கிடையாது. ஆகவே துளசி மாலையோ, வேறு எந்த விதமான மாலைகளுக்கும் செலவு செய்யாதீர்கள்..! ஏதேனும் சமர்ப்பித்துத்தான் ஸேவிக்கவேண்டும் என்றால் உதிரித்துளசியோ அல்லது கொஞ்சமாக புஷ்பங்களேயோ வாங்குங்கள்.. இது போதும்..! அரங்கன் அன்புக்குத்தான் அடிமை..! உங்கள் துாய அன்பினை சமர்ப்பியுங்கள்..! அதுவே பெரிய புஷ்பம் அவனுக்கு..!



மேலும் ஸ்ரீரங்கம் பற்றிய விவரங்களுக்கு..

http://vainavathirupathigal.blogspot.com/2008_07_01_archive.html